கடந்த வருடம் பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில் நடத்துவதற்காகத் திட்டமிடப் பட்டது. ஆனால், அம் மாநாடு அங்கு நடத்தப்படாமல் இரண்டு போட்டி மாநாடுகள், அதே ஆண்டில் சூலை 7 முதல் 9 வரை இந்தியாவின் சென்னையிலும், சூலை 21 முதல் 23 வரை மலேசியாவின் கோலாலம்பூரிலும் நடைபெற்றன.
இது குறித்து ஒரு திறந்த மடலை எழுதியுள்ள, தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளரும் தமிழ் மொழி மற்றும் தமிழர் வாழ்வியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவருமான முனைவர் தேமொழி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.